07 August 2009

வைரமுத்துவின் வரிகள் சில


விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை


யானையின் காலில்
யானை விழுந்ததாய்த்
தகவல் இல்லை

பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை

கரடிக்கு மான்கள்
கால் பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்

இல்லை
மரணத்தின் பள்ளம்

இடைப்பட்ட வாழ்கை
விலங்குக்கில்லை



வாழப் பிறந்தவர்களே

உங்கள்
வாழ்கை முறை
சற்று மாற்றுங்கள்

ஒரு மாறுதலுக்காக –
நீங்கள் கூவிச்
சேவலை எழுப்புங்கள்

தோளில் ஒரு கிளியோடு
அலுவலகம் செல்லுங்கள்

மனம் கவர்ந்த பூனையோடு
மதிய உணவு கொள்ளுங்கள்

மனைவிக்கு
எத்தனை நாளைக்குத்தான்
பசையற்ற பழைய முத்தம் ?

நாளை முதல்
முயல் குட்டிகளுக்கும்
முத்தம் கொடுங்கள்

உங்கள் படுக்கையில்
ஒரு
மூன்றாம் தலையனை
முளைக்கட்டும்

அந்தக்
குட்டித் தலையணையில்
உங்கள்
குட்டிநாய் தூங்கட்டும்…



மனிதர்கள் வணங்கும்படி
சில விலங்குகள் உண்டு
விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?...

3 comments:

Parth said...

"விலங்குகள் வணங்கும்படி
இங்கு மனிதர்கள் உண்டா?... "
You haven't seen Rama narayanan films? Snakes, dogs, cows, goats, elephants everything will kneel and bow-even dance sometimes- to the humans(allegedly Gods) :D

Black Light said...

Lol... Vairamuthu should revise this poem then:-)

Anonymous said...

@parth
lol

@gokul
We can know the true nature of dog if we are born as dog!:D

But the lines are like a nail to the head!